Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களுக்கு கொரோனா- நர்சிங் கல்லூரி மூடல்

செப்டம்பர் 07, 2021 10:33

புதுச்சேரி: புதுவையில் கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ள நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.

புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கும், பேராசிரியர் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது. தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு சென்று மாணவர்கள், ஊழியர்களை வெளியேற்றினர்.

கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து தற்காலிகமாக மூடினர். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஊழியர்களை பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர்.

தலைப்புச்செய்திகள்